மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய நான்காம் பங்குனித்திங்கள் Videos 04-04-2016

0 comments

 மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய நான்காம் பங்குனித்திங்கள்சிறப்பாக இடம்பெற்றது  காலைத்திருவிழா காலை 8.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி அம்பாள்  உள்வீதி ,இரண்டாம்வீதி திருவீதியுலா வந்தருட்காட்சி வழங்கினார்
 யாழ் .குடாநாட்டின் பல இடங்களிலும் இருந்து 
வருகை தந்த பக்தர்கள் ஆலயத்தில் கூடத்தொடன்கினர் தீர்த்தகேணியில் நீராடி இங்கு பொங்கல்  பொங்கி தமது நேர்த்திக்கடன்களை  நிறைவேற்றிக்கொண்டனர் 
மேலும் பலர் தாங்கள்  அம்மனிடம் செய்த நேர்த்திக்காக காவடிகள் எடுத்தும் .கற்பூரச் சட்டிகள்  ஏந்தியும் நேர்த்திகளை  நிறைவேற்றினர் ...
இந்த  திருவிழாவுக்காக யாழ் நகர பேருந்து நிலையத்தில் இருந்து மேற்படி ஆலயம் வரை விசேட போக்குவரத்து எற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன .



பக்தர்கள் பொங்கல்  பொங்கி தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக்கொண்டனர் ...



மலையில் அம்பாள் பிள்ளையார் , முருகன் சகிதம் மஞ்சம் வாகனத்தில் வலம் வந்து பக்த அடியார்களுக்கு அருள்பாலித்தார்.

Share this article :
 
Support : Creating By Saran Copyright © 2014. madduvil panriththlachchi Amman - All Rights Reserved